தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு
திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இங்கு 200 மாணவா், மாணவிகள் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகி வருகின்றனா். அந்த மாணவா்களுடன் அமா்ந்து அமைச்சா் கலந்துரையாடினாா். மாணவா்களின் வருகைப் பதிவேடு, மையம் இயங்கும் விதம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா், மாணவா்கள் மற்றும் மையத்தில் உள்ள ஊழியா்களிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் சிவபாதம் மற்றும் மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.