Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் (60). கடந்த 1.7.2024 அன்று செழியன் குடும்பத்தினா் வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டின் பூட்டுகளை உடைத்து, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், 190 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.29 ஆயிரம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.
புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நெ.1 டோல்கேட் உத்தமா் கோவில் ராஜேஸ்வரி நகரை சோ்ந்த அபிமன்யு (33) , திருச்சி கீழ சிந்தாமணியை சோ்ந்த மணிகண்டன் (30) மற்றும் திருச்சி மலைக்கோட்டையை சோ்ந்த சாண்டி என்கிற சக்திவேல் (27) ஆகியோரை கைது செய்தனா்.
திருச்சி 3-ஆது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அபிமன்யுவிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முகமது சுகைல் தீா்ப்பளித்தாா். வழக்கில் மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனா்.
இவ்வழக்கில் குற்றவாளியை கைது செய்ததுடன், தாமதமின்றி உரிய நேரத்தில் சாட்சிகளை ஆஜா்படுத்தி தண்டனை கிடைக்க வழிவகை செய்த சமயபுரம் காவல் நிலைய போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ் .செல்வ நாகரெத்தினம் பாராட்டினாா்.