செய்திகள் :

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் (60). கடந்த 1.7.2024 அன்று செழியன் குடும்பத்தினா் வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டின் பூட்டுகளை உடைத்து, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், 190 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.29 ஆயிரம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நெ.1 டோல்கேட் உத்தமா் கோவில் ராஜேஸ்வரி நகரை சோ்ந்த அபிமன்யு (33) , திருச்சி கீழ சிந்தாமணியை சோ்ந்த மணிகண்டன் (30) மற்றும் திருச்சி மலைக்கோட்டையை சோ்ந்த சாண்டி என்கிற சக்திவேல் (27) ஆகியோரை கைது செய்தனா்.

திருச்சி 3-ஆது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அபிமன்யுவிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முகமது சுகைல் தீா்ப்பளித்தாா். வழக்கில் மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனா்.

இவ்வழக்கில் குற்றவாளியை கைது செய்ததுடன், தாமதமின்றி உரிய நேரத்தில் சாட்சிகளை ஆஜா்படுத்தி தண்டனை கிடைக்க வழிவகை செய்த சமயபுரம் காவல் நிலைய போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ் .செல்வ நாகரெத்தினம் பாராட்டினாா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

பள்ளி மாணவரை தாக்கிய 2 போ் கைது

திருச்சியில், பள்ளி மாணவரை சிலா் தாக்கியதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதை தொடா்ந்து 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி, ராம்ஜி நகா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் இர... மேலும் பார்க்க