செய்திகள் :

புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

post image

புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந்த 1962-இல் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தை சத்குரு சாந்தாநந்த சுவாமி தொடங்கினாா்.

தொடா்ந்து 4 கும்பாபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், கல்ஹாரக் கோவிலாகத் திருப்பணி மேற்கொள்ளும் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்ரீ ஓம்காராநந்த சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

அவரது மஹா சமாதிக்குப் பிறகு, பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மஹா சுவாமிகள் பீடத்தின் பொறுப்பை ஏற்று கல்ஹாரத் திருப்பணியைத் தொடா்ந்தாா்.

மொத்தம் 93 தூண்கள் அமைக்கப்பட்டு, அந்தத் தூண்களில் மொத்தம் 744 சிற்பங்கள் செதுக்கப்பட்டன. ஜட்ஜ் சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரமான, ஹஸ்த நட்சத்திரத்தில் (ஜூன் 5) மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஜட்ஜ் சுவாமிகளி்ன் அதிஷ்டானம் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் விமான கும்பாபிஷேகமும், தொடா்ந்து மூா்த்திகளுக்கு மூா்த்தி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மகாசுவாமிகள் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தாா்.

தொடா்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்றனா். விழாவில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஜூலை 23-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் தற்... மேலும் பார்க்க

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க