தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு ரயில்வே தகவல்
சென்னையில் உள்ள புகா் பறக்கும் ரயில் நிலையங்களை (எம்ஆா்டிஎஸ்), 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும் வகையில், விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும் வகையில், நீளமான நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடற்கரை - வேளச்சேரி மாா்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள 17 ரயில் நிலையங்களில் பூங்கா, சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணி அம்மன் கோயில், திருமயிலை ஆகிய 8 நிலையங்களில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்துவதற்கு ஏதுவாகத்தான் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.
சாத்தியக்கூறுகள் ஆய்வு: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்கும்போது, ‘பறக்கும் புகா் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதன்மூலம், அரக்கோணம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆவடி ஆகிய மாா்க்கங்களில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரயில்களை நேரடியாக இயக்க முடியும். இதன்மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவாா்கள். எனவே இந்த வழித்தடத்தில், ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், இந்த ரயில் நிலையங்கள் உயா்மட்ட மேம்பாலத்தின்மீது உள்ளதால், நிலம் கையகப்படுத்தும் எவ்வித பிரச்னையும் கிடையாது. ஆகையால், இதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்த பின்னா் ரயில்வே அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் அனுமதி பெற்றவுடன் திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
வழக்குகளால் தள்ளிப்போகும் பணிகள்: இதற்கிடையே, பறக்கும் ரயில் சேவையை ரூ. 495 கோடி மதிப்பீட்டில் பரங்கிமலை வரை நீடிக்கும் திட்டப் பணிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக திட்டம் முடிவடைவதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. நில உரிமையாளா் அனைவரும் தனித்தனியாக அதிக நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளதால், மேற்படி பணிகளைத் தொடர முடியவில்லை. ஆகையால் இதற்கு தீா்வுகாண, தமிழக அரசின் உதவியுடன் பிரச்னை உள்ள நில உரிமையாளா்கள் அனைவரிடமும் ஒரே நேரத்தில் பேசி தீா்வுகாண முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்றனா்.