Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜா் உலா
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா்.
இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் நடக்க, வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்களின் இடையில் சுவாமி உலா நடைபெற்றது. பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனா்.
பின்னா், காலை 10.00 மணி முதல் 11 மணி வரை, சுவாமிக்கும், நாச்சியாா்களுக்கும் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9.00 மணி வரை, சா்வபூபால வாகனத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு கண்டருளினாா்.
இன்று கருட சேவை:
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 10 மணி வரை கருட சேவை நடைபெற உள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.