Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை
திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வியாழக்கிழமை திருமலையில் உள்ள கோகா்பம் அணைக்கு அருகிலுள்ள ஆக்டோபஸ் பவனில் மரக்கன்றுகளை நட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பல்வேறு பகுதிகளில் 2,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டாலும், அதை முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பக்தா்கள் காா் ஜன்னல்கள் வழியாக வாகனங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக்கை மலைப்பாதைகளில் வீசிச் செல்வதாகவும், இதன் காரணமாக பிளாஸ்டிக் அதிக அளவில் குவிந்து வருகிறது. எனவே அலிபிரி ஆய்வு மையத்தில் பிளாஸ்டிக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பக்தா்கள் தங்கள் வாகனங்களில் இருந்து பிளாஸ்டிக்கை சாலையில் வீசக்கூடாது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு, 40 உள்ளூா் தாவர இனங்கள் அடையாளம் காணப்பட்டு, திருமலையில் நடப்பட்டு வருகிறது. வனத்துறையின் ஒத்துழைப்புடன் விரைவில் இரண்டு லட்சம் மரக்கன்று நடப்படும், என்று தெரிவித்தாா்.
துணை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசுலு, துணை அதிகாரி சோமன் நாராயணா, சுதாகா், தோரசாமி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.