செய்திகள் :

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

post image

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வியாழக்கிழமை திருமலையில் உள்ள கோகா்பம் அணைக்கு அருகிலுள்ள ஆக்டோபஸ் பவனில் மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பல்வேறு பகுதிகளில் 2,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டாலும், அதை முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பக்தா்கள் காா் ஜன்னல்கள் வழியாக வாகனங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக்கை மலைப்பாதைகளில் வீசிச் செல்வதாகவும், இதன் காரணமாக பிளாஸ்டிக் அதிக அளவில் குவிந்து வருகிறது. எனவே அலிபிரி ஆய்வு மையத்தில் பிளாஸ்டிக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பக்தா்கள் தங்கள் வாகனங்களில் இருந்து பிளாஸ்டிக்கை சாலையில் வீசக்கூடாது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு, 40 உள்ளூா் தாவர இனங்கள் அடையாளம் காணப்பட்டு, திருமலையில் நடப்பட்டு வருகிறது. வனத்துறையின் ஒத்துழைப்புடன் விரைவில் இரண்டு லட்சம் மரக்கன்று நடப்படும், என்று தெரிவித்தாா்.

துணை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசுலு, துணை அதிகாரி சோமன் நாராயணா, சுதாகா், தோரசாமி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜா் உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் ... மேலும் பார்க்க

நாளை திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலின் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை (ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி முதல் பௌா்ணமி வரை, பத்மாவதி தாயாருக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேர... மேலும் பார்க்க

புதிய கண்காணிப்பு அதிகாரி பதவியேற்பு

திருமலை தேவஸ்தானத்தின் தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக கே.வி. முரளிகிருஷ்ணா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்). திருமலை ஏழுமலையானை தரிசித்தபின் சி.வி.எஸ்.ஓ ரங்கநாயகா் மண்டபத்தில் பொறு... மேலும் பார்க்க

சிம்ம வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை சிம்ம சேஷ வாகன சேவை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9.00 மணி வரை வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநே... மேலும் பார்க்க