Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
நாளை திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் தொடக்கம்
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலின் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை (ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும், ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி முதல் பௌா்ணமி வரை, பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர தெப்போற்சவம் நடத்தப்படுகிறது.
முதல் நாளில், ஸ்ரீ கிருஷ்ணா், ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் தெப்பத்தில் வலம் வருவாா். இரண்டாம் நாளில், ஸ்ரீ சுந்தரராஜ சுவாமியும், மற்றும் கடைசி மூன்று நாள்களில், ஸ்ரீ பத்மாவதி தாயாரும் தெப்பத்தில் உலா வர உள்ளனா்.
தெப்போற்சவத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 7 -ஆம் தேதி இரவு 7.30 - 8.30 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணா் நான்கு மாட வீதிகளிலும், 8 -ஆம் தேதி ஸ்ரீ சுந்தரராஜ சுவாமியும், 9 -ஆம் தேதி ஸ்ரீ பத்மாவதி தாயாரும்நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவா்.
ஜூன் 10 -ஆம் தேதி, இரவு கஜ வாகனத்திலும், 11-ஆம் தேதி, இரவு , கருட வாகனத்திலும் பத்மாவதி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா்.
ஜூன் 14- ஆம் தேதி, உத்திராடம் நட்சத்திரத்தன்று, மாலை 6.45 மணிக்கு தாயாா் கோயிலின் வீதிகளில் கஜ வாகனத்தில் வலம் வருவாா்.
ஆா்ஜித சேவை ரத்து:
தெப்போற்சவம் காரணமாக, திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஐந்து நாள்களுக்கு கல்யாணோற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில், தேவஸ்தான இந்து தா்மபிரச்சார பரிஷத், அன்னமாச்சாா்யா திட்டம் மற்றும் தசசாஹித்ய திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் ஆன்மிக, பக்தி இசை, கலாசார நிகழ்ச்சிகள், பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் ஒவ்வொரு நாளும் ஏற்பாடு செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.