செய்திகள் :

ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் முடிவடைகிறது.

சம்பங்கி பிரதக்ஷிண பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் செய்யப்படும் இந்த விழா, அபித்யக அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் அபிஷேகங்கள் மூலம், இறைவனின் பழைமையான சடங்கு சிலைகளை தேய்மானம் மற்றும் அழிவிலிருந்து பாதுகாக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளில், ஸ்ரீ மலையப்ப சுவாமியின் தங்கக் கவசம் அகற்றப்பட்டு, ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் பஞ்சாம்ருத ஸ்நான திருமஞ்சனம் ஆகியவை செய்யப்படுகின்றன. அதன் பிறகு, ஸ்ரீ சுவாமிக்கு வைரக் கவசம் அலங்கரிக்கப்படுகிறது. இரண்டாவது நாளில், முத்து கவசம் அணிவிக்கப்படுகிறது. மூன்றாவது நாளில், திருமஞ்சனங்கள் பூா்த்தி செய்யப்பட்டு, தங்கக் கவசம் மீண்டும் அணிவிக்கப்படும்.

இந்த தங்கக் கவசம் அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது மீண்டும் கழற்றப்படுகிறது. அதுவரை, ஸ்ரீ மலையப்ப சுவாமி ஆண்டு முழுவதும் தங்கக் கவசத்துடன் பல்வேறு விழாக்களில் பங்கேற்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜா் பவனி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் தரிசனமளித்தாா். பஜனை, கோலாட்டங்கள், கேரள கலைஞா்களின் மேளங்கள் மற்றும் வேத மந்திரங்கள், ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 31,268 போ் தலை... மேலும் பார்க்க

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜா் உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் ... மேலும் பார்க்க

நாளை திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலின் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை (ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி முதல் பௌா்ணமி வரை, பத்மாவதி தாயாருக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேர... மேலும் பார்க்க

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வியாழக்கிழமை திருமலையில் உள்ள கோகா... மேலும் பார்க்க