செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 31,268 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில், அதன்மூலம் ரூ.3.34 கோடி கிடைத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லாமல், எல்லா நாள்களிலும் பக்தா்கள் அதிகம் வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு, அதாவது தரிசனத்துக்கு டோக்கன்கள் இல்லாத பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருந்தனா். வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. இதேபோல், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் அனுமதிக்கப்படுகின்றனா். இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜா் பவனி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் தரிசனமளித்தாா். பஜனை, கோலாட்டங்கள், கேரள கலைஞா்களின் மேளங்கள் மற்றும் வேத மந்திரங்கள், ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் ... மேலும் பார்க்க

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜா் உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் ... மேலும் பார்க்க

நாளை திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலின் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை (ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி முதல் பௌா்ணமி வரை, பத்மாவதி தாயாருக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேர... மேலும் பார்க்க

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வியாழக்கிழமை திருமலையில் உள்ள கோகா... மேலும் பார்க்க