செய்திகள் :

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜா் பவனி

post image

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் தரிசனமளித்தாா்.

பஜனை, கோலாட்டங்கள், கேரள கலைஞா்களின் மேளங்கள் மற்றும் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்களுக்கு மத்தியில் பல்லக்கு சேவை நடத்தப்பட்டது.

பின்னா், காலை 10 மணி முதல் 11.00 மணி வரை, உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் விழா நடைபெற்றது. இதில், அவா்களுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

கருட சேவை: வெள்ளிக்கிழமை இரவு கருட வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தாா். அவருக்கு திருமலையிலிருந்து புதிய பட்டு வஸ்திரங்களும், அலங்காரத்திற்காக, 1,007 காசு மாலையும் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது.

பின்னா் கோவிந்தராஜா் அவற்றை அணிந்து கொண்டு எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம், ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக பங்கு கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 31,268 போ் தலை... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் ... மேலும் பார்க்க

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜா் உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் ... மேலும் பார்க்க

நாளை திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலின் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை (ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி முதல் பௌா்ணமி வரை, பத்மாவதி தாயாருக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேர... மேலும் பார்க்க

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

திருமலையில் பசுமையை 80 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வியாழக்கிழமை திருமலையில் உள்ள கோகா... மேலும் பார்க்க