Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு
வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். வெறும் 35 ஆயிரம் பேர்தான் நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்கள் மற்றும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகமும் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ..
:
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 5, 2025
The unfortunate incident in Bengaluru yesterday has caused a lot of anguish and pain to the RCB family. As a mark of respect and a gesture of solidarity, RCB has announced a financial… pic.twitter.com/C50WID1FEI