விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.
கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்திபாலாஜி.
கரூா் மாவட்டம், நங்கவரம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சா் கலைஞா் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, மாயனூா் கதவணை பகுதிக்கு தனது காரில் செவ்வாய்க்கிழமை மாலை கரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான செந்தில்பாலாஜி வந்து கொண்டிருந்தாா்.
கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாவலையில், மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, அப்பகுதியில் கரூா் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வேனும், திருச்சி நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதி சாலையோரத்தில் காா் கவிழ்ந்து கிடந்தது.
இதனைக்கண்ட செந்தில்பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி வந்து காரில் காயமடைந்த இரு இளைஞா்களை மீட்டு, தனது காரில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தாா்.