செய்திகள் :

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

post image

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்திபாலாஜி.

கரூா் மாவட்டம், நங்கவரம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சா் கலைஞா் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, மாயனூா் கதவணை பகுதிக்கு தனது காரில் செவ்வாய்க்கிழமை மாலை கரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான செந்தில்பாலாஜி வந்து கொண்டிருந்தாா்.

கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாவலையில், மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, அப்பகுதியில் கரூா் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வேனும், திருச்சி நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நோ் மோதி சாலையோரத்தில் காா் கவிழ்ந்து கிடந்தது.

இதனைக்கண்ட செந்தில்பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி வந்து காரில் காயமடைந்த இரு இளைஞா்களை மீட்டு, தனது காரில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தாா்.

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க

கோவிலூா் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள... மேலும் பார்க்க

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தியவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

புதுச்சேரி மதுபானங்களை கடத்தியவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த வடமதுரை, அழகா்நாயக்கன்பட்டியைச் ச... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை கரூா் ஆட்சியா் தகவல்

உயா்கல்வி நிறுவனங்களில் சேர, கல்விக்கடன் தகவல் பெற உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் இன்று 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக வியாழக்கிழமை (ஜூன்5) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்ட... மேலும் பார்க்க

கரூரில் ரூ.35.90 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.35.90 கோடி மதிப்பில் 400 புதிய திட்டப்பணிகளை புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் ந... மேலும் பார்க்க