செய்திகள் :

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

post image

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக்கும்வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். கோயில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோயில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறுகின்றனர்.

எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டுமொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக்கூட விட்டு வைக்காமல் திருடுவதா? இந்தியா கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?

தமிழகத்தில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த நிலையில், இவர் பகுத்தறிவு பற்றி பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோயில் திருவிழாக்களைத் தேடித் தேடிச் செல்லும் துர்கா ஸ்டாலின் உள்பட திமுக குடும்பத்தினரும் நாகரிகமற்றவர்களா என்று தமிழக பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா விமர்சித்துள்ளார்.

என்ன பேசினார் அமைச்சர் மனோ தங்கராஜ்?

பெங்களூருவில், புதன்கிழமை நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் 11 பேர் சிக்கி பலியாகினர்.

இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கர்நாடக அரசைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. பல்வேறு பகுத்தறிவு பிரசாரங்களையும் மேற்கொள்வதுடன், பகுத்தறிவு அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.

கோயில் திருவிழாக்களில் அதிகளவிலான கூட்டம் கூடுவது, விளையாட்டு நிகழ்வுகளையும் அதிகளவில் பார்க்கச் செல்வது போன்றதெல்லாம் நாகரிகமான சமூகத்துக்கு நல்ல அடையாளமாகத் தெரிவதில்லை.

நீ பார்வையாளனாக இருக்காதே, பங்கேற்பவனாக இரு என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நேற்று கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்திருப்பார்கள். பொது இடங்களில் அதிகளவிலான கூட்டம் கூடி, நெருக்கடியை ஏற்படுத்துவதை பொதுமக்களே தவிர்க்க வேண்டும்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கர்நாடக அரசைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. இது பெரும்பாலான இடங்களில் நடக்கிறது. பொதுமக்கள், தங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். கூட்டங்களில் முண்டியடித்துக் கொண்டு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க