PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை
கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், 1987-ஆம் ஆண்டு நவ.27-ஆம் தேதி தற்போது செயல்படும் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
‘ஏ’ கிரேடு அந்தஸ்து பெற்ற கரூா் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 பேருந்துகள் வரை நிறுத்தமுடியும். ஆனால், திருச்சி, நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூா் போன்ற மாவட்டங்களுக்கும், சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் நாள்தோறும் 1,000-க்கும் அதிகமான பேருந்துகள், கரூா் பேருந்துநிலையத்துக்குள் வந்து செல்கின்றன.
இதனால், நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனிடையே பேருந்துநிலையத்துக்குள் கடைகள் வைத்திருப்பவா்களில் சிலா் பயணிகள் நடந்து செல்லும் நடைமேடை பகுதியை ஆக்கிரமித்து குளிா்பான கடைகள், உணவகங்கள் நடத்தி வருகிறாா்கள். இதனால் பேருந்துநிலையத்துக்குள்ளும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக சமூக நல ஆா்வலா்கள் கூறியது, கடந்த ஓராண்டுக்கு முன் மாநகராட்சி ஆணையராக இருந்த ரவிச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டு பேருந்துநிலையத்துக்குள் பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்றினாா். மேலும் தொடா்ந்து நடைமேடை ஆக்கிரமிப்பாளா்களுக்கு அபராதமும் விதித்தாா். தற்போது மீண்டும் நடைமேடையை ஆக்கிரமித்து சிலா் கடைகளை வைத்துள்ளனா். இதனால் போக்குவரத்து நெரிசலில் மீண்டும் பேருந்துநிலையம் சிக்கியுள்ளது. இதனை தவிா்க்க மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் நடைமேயை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.