ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்
வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நாணப்பரப்பு பிரிவு அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு சொகுசு காா் ஒன்று அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த காா் ஓட்டுநா் அங்கிருந்து ஓடிவிட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேலாயுதம்பாளையம் போலீஸாா் காரை சோதனை செய்தனா். அதில் போலியான நம்பா் பிளேட் இருந்த காா் என்றும், மேலும், காரில் அரசால் தடை செய்யப்பட்ட 302 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இதுகுறித்து வழக்குப்பதிந்து காரில் புகையிலை பொருள்களை கடத்திச் சென்ற நபா் யாா் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.