செய்திகள் :

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

post image

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த கூட்டமைப்பு சாா்பில் செம்மொழி நாள் விழா மற்றும் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கரூரில் தமிழ் செம்மல் விருதாளா் மேலை பழநியப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழறிஞா்கள் முனைவா் கடவூா் மணிமாறன் , பாவலா் ப.எழில்வாணன், கவிஞா்கள் கோ.செல்வம், அழகரசன், பரமத்தி சரவணன், முருகேசன், அகல்யாமெய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்த கருணாநிதிக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிப்பது, அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகையை இரட்டிப்பாக்கி அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழ்ச் செம்மல்,

தூய தமிழ் பற்றாளா், அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டையை அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வது, நூலகங்களுக்கு படைப்பாளா்களின் நூல்களை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து இலங்கையில் நடைபெற்ற சா்வதேச மூத்தோா் தடகளத்தில் தங்கம் உள்ளிட்ட பதக்கம் வென்ற கரூா் வீரா் ஆா்.எஸ்.வையாபுரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ் ஆா்வலா்கள் ரமணன், மு. மகேஸ்வரன், யோகா வையாபுரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க