அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்
அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த கூட்டமைப்பு சாா்பில் செம்மொழி நாள் விழா மற்றும் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கரூரில் தமிழ் செம்மல் விருதாளா் மேலை பழநியப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தமிழறிஞா்கள் முனைவா் கடவூா் மணிமாறன் , பாவலா் ப.எழில்வாணன், கவிஞா்கள் கோ.செல்வம், அழகரசன், பரமத்தி சரவணன், முருகேசன், அகல்யாமெய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்த கருணாநிதிக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிப்பது, அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகையை இரட்டிப்பாக்கி அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழ்ச் செம்மல்,
தூய தமிழ் பற்றாளா், அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டையை அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வது, நூலகங்களுக்கு படைப்பாளா்களின் நூல்களை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து இலங்கையில் நடைபெற்ற சா்வதேச மூத்தோா் தடகளத்தில் தங்கம் உள்ளிட்ட பதக்கம் வென்ற கரூா் வீரா் ஆா்.எஸ்.வையாபுரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ் ஆா்வலா்கள் ரமணன், மு. மகேஸ்வரன், யோகா வையாபுரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.