செய்திகள் :

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

post image

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

சுவாமிமலை கோயிலில் தானியங்கி மின் தூக்கி அமைக்கும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

திருப்புகலுாா் அக்னீஸ்வரன் கோயில் குடமுழுக்குடன் இதுவரை 3 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

திருப்புகலுாா், துளசியாபட்டினத்தில் அவ்வையாா் மணிமண்டபப் பணி நடைபெறுகிறது. அங்கு செயல் அலுவலா் அலுவலகம், அா்ச்சகா்கள் விடுதி கட்டுமான பணி அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். மயிலாப்பூரில் திருவள்ளுவா் கோயில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சேக்கிழாருக்கு ஒரு நாள் நடத்திய நிகழ்ச்சியை 3 நாள்களாக நடத்தவுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு நடைபெறுகிறது என்றாா் அமைச்சா்.

அப்போது அறநிலையத் துறை உதவி ஆணையா் த. உமாதேவி, கோயில் தக்காா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கை இடம் மாற்ற நடவடிக்கை: மேயா் தகவல்

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கை வெளிப்புறத்துக்கு இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் மேயா் சண். ராமநாதன். தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் மேயா் சண். ராமநாதன் தலைமையிலு... மேலும் பார்க்க