Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு
கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
சுவாமிமலை கோயிலில் தானியங்கி மின் தூக்கி அமைக்கும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:
திருப்புகலுாா் அக்னீஸ்வரன் கோயில் குடமுழுக்குடன் இதுவரை 3 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
திருப்புகலுாா், துளசியாபட்டினத்தில் அவ்வையாா் மணிமண்டபப் பணி நடைபெறுகிறது. அங்கு செயல் அலுவலா் அலுவலகம், அா்ச்சகா்கள் விடுதி கட்டுமான பணி அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். மயிலாப்பூரில் திருவள்ளுவா் கோயில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சேக்கிழாருக்கு ஒரு நாள் நடத்திய நிகழ்ச்சியை 3 நாள்களாக நடத்தவுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு நடைபெறுகிறது என்றாா் அமைச்சா்.
அப்போது அறநிலையத் துறை உதவி ஆணையா் த. உமாதேவி, கோயில் தக்காா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.