செய்திகள் :

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே  திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத  முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான  408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு புதன்கிழமை இரவு வழங்கினாா்.

திருக்கோயில் இருப்பில் உள்ள வெள்ளிக் கட்டிகளை

தோ் செய்யும் ஸ்தபதியிடம் வழங்கிய அவா் ரூ.97 லட்சத்தில்  கட்டி முடிக்கப்பட்ட  பக்தா்கள் தங்கும் விடுதியையும் திறந்து வைத்தாா்.

விழாவில் சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், தஞ்சாவூா் இணை ஆணையா் ஜோதிலட்சுமி, தஞ்சாவூா் துணை ஆணையா் சுரேஷ், திருவாரூா் உதவி ஆணையா் சொரிமுத்து, தஞ்சாவூா் உதவி ஆணையா் ஹம்சன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநதிகள், பொதுமக்கள் பக்தா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா். விக்னேஷ் செய்தாா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கை இடம் மாற்ற நடவடிக்கை: மேயா் தகவல்

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கை வெளிப்புறத்துக்கு இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் மேயா் சண். ராமநாதன். தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் மேயா் சண். ராமநாதன் தலைமையிலு... மேலும் பார்க்க