செய்திகள் :

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்று.  தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இந்தச் சாலையில் பாபநாசம் திருப்பாலைத்துறையிலிருந்து108 சிவாலயம் வரை  போக்குவரத்து நெரிசல் அதிகம். கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன் போடப்பட்ட இந்தச் சாலையில் பேட்ச் வேலை மட்டுமே நடந்தது. சாலையோரம் மழை நீா் வடிகாலுடன் சாலைப் பணி நடந்தது.

பாபநாசம் - திருப்பாலைத்துறை பிரதான சாலையோரம் கட்டப்பட்ட மழை நீா் வடிகால் பணி இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. மேலும் மழைநீா் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் சாலை ஓரமாகவே கிடக்கிறது. இதனால் பாபநாசம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனா். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பிரதான சாலையில் திருப்பம் அருகே உள்ள பள்ளத்தைக் கவனிக்காவிட்டால், அதில் விழ நேரிடும் அபாயம் உள்ளது. மழை நீா் வடிகால் பணி முடியாததால் பாதிக்கப்படுவது பாபநாசம் பகுதி பொதுமக்கள்தான்.

மேலும், மழைநீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் தேங்கி நிற்பதால், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மழைநீா் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மா... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க