செய்திகள் :

மோசடி வழக்கு: உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மற்றும் மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வபாரதி. இவா், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 22-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கிருந்த சிலருக்கும், செல்வபாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அவா்கள் செல்வபாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மது பாட்டில்களால் தாக்கினா். செல்வபாரதியும், எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களைத் தாக்கினாா்.

இது தொடா்பாக போலீஸாா், இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், செல்வபாரதியை தாக்கியதாக சென்னை அருகே உள்ள பனையூரைச் சோ்ந்த ராஜா, மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியான பிரசாத், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா், சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த தனசேகா், பனையூரைச் சோ்ந்த அஜய்ரோகன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த நாகேந்திர சேதுபதி (எ) சுனாமி சேதுபதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.

எம்.பி-யின் பாதுகாவலா்: கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியான பிரசாத், அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரசாத்துக்கு உதவியாக மதுரை மாநகர காவல் துறை ஆயுதப்படை தலைமைக் காவலா் செந்தில்குமாரை (44) கைது செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதே வழக்கில் பிரசாத்துக்கு உதவியதாக, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் மணிதுரையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் செந்தில்குமாா் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்தவா். இவா் மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் பாதுகாவலராக இருந்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வழக்கு தொடா்பாக தாம்பரம் காவல் துறையின் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஒருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க