செய்திகள் :

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

post image

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்தார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியனின் நண்பர் சென்னை மயிலாப்பூர் லாஸ் அவென்யூ முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த ராஜ் அருண் (வயது: 70). இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரிடம் பாலசுப்ரமணியன் தனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.

accused

அப்போது, தனது மகன் கனடாவில் வசித்து வருவதாகவும், உங்களது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய பாலசுப்பிரமணியன், ராஜ் அருண் கேட்டுக்கொண்டபடி அவரிடம் 5.70 வரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

அதை வாங்கிக் கொண்ட ராஜ் அருண், மனோஜ் பிரபாகருக்கு வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். பலமுறை பாலசுப்பிரமணியன் ராஜ் அருணிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், ராஜ் அருண் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இதனால் அதிர்ச்சடைந்த பாலசுப்ரமணியன் பலமுறை ராஜ் அருணிடம் பணம் கேட்டும் கொடுக்காததால் பாலசுப்பிரமணியன் நேரடியாக சென்னைக்குச் சென்று ராஜ் அருணை நேரில் சந்தித்து பணத்தைக் கேட்டபோது, ராஜ் அருண் கோபமடைந்து பாலசுப்ரமணியனைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, பாலசுப்ரமணியன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் இரு தரப்பினரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து இருந்தார்.

ஆனால், ராஜ் அருண் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர மறுத்துவிட்டார். அதன் அடிப்படையில், ராஜ் அருண் மீது ரூ5.70 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

பண மோசடி
பண மோசடி

பின்னர், அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் குறிப்பிட்ட இடத்தில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார் ராஜ் அருணைக் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் ராஜ் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க