தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?
ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வருகிறார். நிஷாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அது அவர்களுக்குள் காதலாக மாறியது.
நிஷாவின் காதலர் அடிக்கடி நிஷா வீட்டிற்கு வந்தார். அப்படி வரும் போது நிஷாவின் 13 வயது மகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இது நிஷாவிற்குத் தெரிய வந்தது.

இதையடுத்து நிஷாவே தனது மகளைக் காதலனைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்னார்.
தனது காதலன் மட்டுமல்லாது வேறு சில ஆண்களையும், தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய நிஷா சொல்லியிருக்கிறார்.
இதனால், பாதிக்கப்பட்ட நிஷாவின் மகள் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.
உடனே அப்பெண்ணை அவரது தந்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிஷாவையும், அவரது காதலனையும் கைது செய்தனர்.
நிஷாவின் புகார் உண்மையா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்தபோது அவரது குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது.
இது குறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவரைக் கடந்த ஆகஸ்ட் மாதமே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதோடு நிஷா இப்போது கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லை என்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மும்பையில் ரீனா ஷேக் என்ற பெண் தனது இரண்டரை வயது மகளைத் தனது கண்முன்பு காதலனைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்யச் செய்து படுகொலை செய்தார்.
இது தொடர்பாக ரீனாவும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.