செய்திகள் :

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

post image

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வருகிறார். நிஷாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அது அவர்களுக்குள் காதலாக மாறியது.

நிஷாவின் காதலர் அடிக்கடி நிஷா வீட்டிற்கு வந்தார். அப்படி வரும் போது நிஷாவின் 13 வயது மகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இது நிஷாவிற்குத் தெரிய வந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதையடுத்து நிஷாவே தனது மகளைக் காதலனைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்னார்.

தனது காதலன் மட்டுமல்லாது வேறு சில ஆண்களையும், தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய நிஷா சொல்லியிருக்கிறார்.

இதனால், பாதிக்கப்பட்ட நிஷாவின் மகள் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.

உடனே அப்பெண்ணை அவரது தந்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிஷாவையும், அவரது காதலனையும் கைது செய்தனர்.

நிஷாவின் புகார் உண்மையா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்தபோது அவரது குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது.

இது குறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவரைக் கடந்த ஆகஸ்ட் மாதமே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதோடு நிஷா இப்போது கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லை என்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மும்பையில் ரீனா ஷேக் என்ற பெண் தனது இரண்டரை வயது மகளைத் தனது கண்முன்பு காதலனைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்யச் செய்து படுகொலை செய்தார்.

இது தொடர்பாக ரீனாவும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க