தாம்பத்திய உறவில் இது அசிங்கம் அல்ல..! - காமத்துக்கு மரியாதை 243
அரவக்குறிச்சி அருகே முதியவா் தற்கொலை
அரவக்குறிச்சி அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் கண்டா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (58). இவா் கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.
பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால் விரக்தி அடைந்த ஆனந்தகுமாா் மே 31-ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].