செய்திகள் :

குஜராத்தில் 461 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

post image

குஜராத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும் அதிகரித்து வருகின்றன. அதிலும் தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளதையடுத்து 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் 441 பேர் வீடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

அகமதாபாத்தில் அதிகபட்சமாக 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 76 ஆக இருந்த பாதிப்பு, தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 37 வயது பெண் ஒருவர் அசர்வா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 2 ஆண்கள், ஒரு பெண் மற்றும் எட்டு மாத பெண் குழந்தை உள்பட நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு கேரளத்தில் (1,416), மகாராஷ்டிரம் (494) முறையே குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து தில்லி (393) மற்றும் மேற்கு வங்கம் (372) ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக அகமதாபாத் போன்ற நகர்ப்புற மையங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் உள்ளூர் சுகாதார கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறது.

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க

பிஜு ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யுடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்

பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞரமான பினாகி மிஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் ஜொ்மனியில் திருமணம் செய்துகொண்டனா். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் மக்களவ... மேலும் பார்க்க