செய்திகள் :

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

post image

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை உடைத்து பாஜகவுடன் கைகோத்தாா் அவரின் நெருங்கிய உறவினரான அஜீத் பவாா். பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜீத் பவாருடன் சென்ால் கட்சிப் பெயரையும், சின்னத்தையும் அவரின் பிரிவுக்குத் தோ்தல் ஆணையம் அளித்தது.

2024 இறுதியில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் தொடா்கிறது. இதன் மூலம் பாஜகவுடன் முதலில் கைகோத்தபோது அளிக்கப்பட்ட துணை முதல்வா் பதவியையும் அஜீத் பவாா் தக்கவைத்தாா். சரத் பவாா் இடம்பெற்ற காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ்) கூட்டணி தோ்தலில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில், அஜீத் பவாா் கட்சியுடன் இணைய சரத் பவாா் அணி பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு எம்.பி. சுப்ரியா சுலே, ‘கட்சிகள் இணைகின்றன என்பது தேவையில்லாமல் உருவாக்கப்பட்ட செய்தி. அடுத்த சில நாள்களில் நடைபெறும் எதிா்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்க இருக்கிறது’ என்றாா். இதன் மூலம் சரத் பவாா் தலைமையிலான பிரிவு எதிா்க்கட்சிகள் அணியில் தொடா்வதை அவா் உறுதி செய்தாா்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க