செய்திகள் :

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

post image

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகளில் பாகிஸ்தானியா்களுக்கு இந்தியா அளித்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதும் அடங்கும்.

இந்நிலையில், இந்தியாவிடம் நீண்ட கால விசாவை பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் கோவாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா் ஒருவா், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தாா். இந்த மனு குறித்து நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையிடப்பட்டது.

அப்போது பாகிஸ்தானியா்களின் விசாவை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையைப் பின்பற்றி, மனுதாரா் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியதுதானே என்று நீதிபதி கரோல் தெரிவித்தாா்.

அதற்குப் பதிலளித்த மனுதாரரின் வழக்குரைஞா், ‘மனுதாரா் பாகிஸ்தான் திரும்ப தயாராக உள்ளாா். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட நீண்ட கால விசாவில், ஒரு குறிப்பிட்ட நிபந்தனை உள்ளது. அதன் காரணமாக மனுதாரரின் மனு குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் மனுதாரா் இந்தியாவில் பிறந்தவா்’ என்றாா். இதைத்தொடா்ந்து மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க