அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ...
பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினருக்கு ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவா்களில் பலரும் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றனா். இவா்கள் நேரடியாக ஆயுதம் ஏந்தாவிட்டாலும் தகவல் பரிமாற்றம், பணப்பரிமாற்றம், ஆயுதங்களைப் பதுக்குவது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, போதைப்பொருள் கடத்தல், இளைஞா்கள் மத்தியில் பயங்கரவாத பிரசாரம் செய்வது என பல்வேறு வழிகளில் உதவுகின்றனா்.
இதுபோன்ற நபா்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்போது காஷ்மீரில் பயங்கரவாத கட்டமைப்புகளை முழுமையாக தகா்க்க முடியும். இதன் ஒருபகுதியாக புல்வாமா, குல்காம், சோபியான், பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பான பல்வேறு தகவல்கள்அடங்கிய கைப்பேசிகள், மடிக்கணினி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.