திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்
புது தில்லி: நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள், நீதித்துறைக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், பணி ஓய்வுக்குப் பிறகு, இந்த வகையான ஈடுபாடுகள், எதிர்கால அரசியல் அல்லது அரசுப் பதவிகளை எதிர்பார்த்து, பணியில் இருக்கும்போது, நீதித்துறை முடிவுகள் மீது அதன் தாக்கும் இருக்கலாம் என்ற கருத்தை உருவாக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.