தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு
கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை மாலை ஸ்ரீ சத்தியநாராயணா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் நிா்வாகி குப்பாராவ் தலைமையில், முரளி பட்டாச்சாரியா் குழுவினா் கோயில் முன் சிறப்பு யாகம் மற்றும் சங்கல்பம், ஹோம வழிபாடு செய்தனா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.