செய்திகள் :

Space: "விண்வெளியிலிருந்து சிக்னல் அனுப்பும் 'மர்ம' பொருள்" - அறிவியலாளர்கள் சொல்வது என்ன?

post image

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒருமுறை பிரபஞ்சத்திலிருந்து மர்மப் பொருளொன்று பூமிக்கு எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ சிக்னல்களை அனுப்புவதாகக் கண்டறிந்துள்ளனர்.

இது இன்றுவரை விண்வெளியில் நடந்திராத புதி நிகழ்வாகும். இந்த சிக்னல்களை அனுப்பும் பொருளுக்கு ASKAP J1832-0911 எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஸ்கொயர் கிலோமீட்டர் ஆரி பாத்ஃபைண்டர் மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்-ரே கண்காணிப்பகம் துணையுடன் இந்த நிகழ்வைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிக்னல்களை வழங்கும் பொருள் பால்வெளி அண்டத்தில் 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்கின்றனர்.

அண்டம்
அண்டம்

சரியான இடைவெளியில் அந்த பொருள் அனுப்பும் சிக்னல்கள் 2 நிமிடங்கள் வரை நிலைத்திருந்து, மீண்டும் 42 நிமிடங்கள் கழித்துத் தோன்றுமாம். இந்தச் சீரான தன்மை அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இது ஏன் நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளாததால் இதனை நீண்ட கால நிலையற்ற தன்மை (Long-Period Transist) கொண்ட நிகழ்வாக வரையறுக்கின்றனர்.

இதுவரை கண்டறியப்படாத மர்மம்!

இந்த நிகழ்வு இறந்த நட்சத்திரங்களின் பரிணாமம் மற்றும் விண்வெளி இயற்பியலின் சாத்தியக் கூறுகள் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என அறிவியலாளர்கள் எண்ணுகின்றனர்.

ஏனென்றால் இதுவரை அறியப்பட்டுள்ள எந்தவொரு நட்சத்திரம் மற்றும் பல்சரின் (தொடர்ச்சியான மின் சமிக்ஞைகளை வழங்கக் கூடிய விண்மீன்) நடத்தைகளும் ASKAP J1832-0911-ன் நடத்தைகளுடன் ஒத்துப்போகவில்லை.

பல்சர்கள் சில வினாடி அல்லது மில்லி வினாடி அளவிலேயே சிக்னல்களை அளிக்கும். ஆனால் இந்தப் பொருள் நீண்ட மற்றும் சீரான இடைவெளியுடன் சிக்னல்களை வழங்குவதால் இதன் 'தாளம்' அறிஞர்களை வியப்படையச் செய்துள்ளது.

இதுவரை இந்த சிக்னல்கள் புரிந்து கொள்ளப்படவில்லை. விண்வெளியின் ஆழத்தில் நடக்கும் நிலையற்ற நிகழ்வாக இதை வகைப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பினால் விளையும் நன்மை என்ன?

இந்தக் கண்டுபிடிப்பு நட்சத்திரங்களின் எச்சங்கள் மற்றும் பிரபஞ்சத்தில் நடக்கும் உயர் ஆற்றல் நிகழ்வுகள் (High Energy Cosmic Events) பற்றிய இன்றைய புரிதலை மாற்றியமைப்பதாக அமையலாம் என்கின்றனர்.

பிரபஞ்சத்திலிருந்து வரக் கூடிய சிக்னல்களை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதாவது வேற்றுக்கிரக உயிரினங்கள் சிக்னல்களை வழங்கலாம் என்ற தேடலும் இதற்குக் காரணம். இதற்காக நாசாவும் அவ்வப்போது சில சிக்னல்களைப் பிற கோள்களை நோக்கி அனுப்பி வருகிறது.

ஆனால் இந்த முறை, ASKAP J1832-0911 போல வேறு சிக்னல்களை நம்மால் கண்டறிய முடிகிறதா என்பதை நோக்கி அறிவியலாளர்கள் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதன் மூலம் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் குறித்த பல மர்மங்களுக்கு விடை கிடைக்குமா எனத் தேடுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போகும் முதல் இந்தியர் - யார் இந்த சுபான் ஷு சுக்லா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீர... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை அளவிட ”இ-டாட்டூவை” அறிமுகப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்! - எப்படி செயல்படும் தெரியுமா?

மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு மின்னணு பச்சை குத்தலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை இ-டாட்டூ என்கின்றனர். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள... மேலும் பார்க்க

`தங்கமாக மாறிய ஈயம்' - செயற்கை தங்கம் கண்டுபிடிப்பும் வரலாறும்.. இனி தங்கம் விலை?

`செயற்கை தங்கம்' எப்படி உருவாக்கப்பட்டது?ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக மிக நுண்ணிய அளவில் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளனர். இப்படி உருவான தங்கம் ஒரு வினாடிக்குள் தன்னை மாய்த்துக் கொண்டது. எப்படி... மேலும் பார்க்க

பூமியின் மையத்திலிருந்து பொங்கி வழியும் தங்கம்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

பூமியின் மையத்திலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மேற்பரப்புக்கு கசிந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹவாய் எரிமலை பாறைகள் பற்றிய ஒரு புதிய ஆய்வில் தங்கம் கசிந்... மேலும் பார்க்க

ஒலி அலைகளால் உடல் எடையை குறைக்க முடியுமா? - புதிய ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

ஒலியைப் பற்றிய சமீபத்திய ஆய்வில் சத்தத்தைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் கன்சாய் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாள... மேலும் பார்க்க

இந்திய அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் காலமானார்.. அணுசக்தி துறையில் அவரது சாதனைகள்

பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருது வென்ற இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். எம்‌.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அண... மேலும் பார்க்க