Germany ஐ வீழ்த்தி GDPல் 3rd Place செல்கிறதா India? Modi அரசு சொல்லும் கணக்கு? -...
Space: "விண்வெளியிலிருந்து சிக்னல் அனுப்பும் 'மர்ம' பொருள்" - அறிவியலாளர்கள் சொல்வது என்ன?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒருமுறை பிரபஞ்சத்திலிருந்து மர்மப் பொருளொன்று பூமிக்கு எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ சிக்னல்களை அனுப்புவதாகக் கண்டறிந்துள்ளனர்.
இது இன்றுவரை விண்வெளியில் நடந்திராத புதி நிகழ்வாகும். இந்த சிக்னல்களை அனுப்பும் பொருளுக்கு ASKAP J1832-0911 எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்கொயர் கிலோமீட்டர் ஆரி பாத்ஃபைண்டர் மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்-ரே கண்காணிப்பகம் துணையுடன் இந்த நிகழ்வைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த சிக்னல்களை வழங்கும் பொருள் பால்வெளி அண்டத்தில் 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்கின்றனர்.
சரியான இடைவெளியில் அந்த பொருள் அனுப்பும் சிக்னல்கள் 2 நிமிடங்கள் வரை நிலைத்திருந்து, மீண்டும் 42 நிமிடங்கள் கழித்துத் தோன்றுமாம். இந்தச் சீரான தன்மை அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இது ஏன் நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளாததால் இதனை நீண்ட கால நிலையற்ற தன்மை (Long-Period Transist) கொண்ட நிகழ்வாக வரையறுக்கின்றனர்.
இதுவரை கண்டறியப்படாத மர்மம்!
இந்த நிகழ்வு இறந்த நட்சத்திரங்களின் பரிணாமம் மற்றும் விண்வெளி இயற்பியலின் சாத்தியக் கூறுகள் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என அறிவியலாளர்கள் எண்ணுகின்றனர்.
ஏனென்றால் இதுவரை அறியப்பட்டுள்ள எந்தவொரு நட்சத்திரம் மற்றும் பல்சரின் (தொடர்ச்சியான மின் சமிக்ஞைகளை வழங்கக் கூடிய விண்மீன்) நடத்தைகளும் ASKAP J1832-0911-ன் நடத்தைகளுடன் ஒத்துப்போகவில்லை.
@chandraxray and @SKA_Australia telescope have uncovered a strange cosmic object: ASKAP J1832−0911. It emits powerful, synchronized bursts of X-rays and radio waves every 44 minutes—unlike anything scientists have seen before. This behavior doesn't match known neutron stars or… pic.twitter.com/kUCpMz3A1Y
— Piotr Dyląg (@PitPlayfun) May 28, 2025
பல்சர்கள் சில வினாடி அல்லது மில்லி வினாடி அளவிலேயே சிக்னல்களை அளிக்கும். ஆனால் இந்தப் பொருள் நீண்ட மற்றும் சீரான இடைவெளியுடன் சிக்னல்களை வழங்குவதால் இதன் 'தாளம்' அறிஞர்களை வியப்படையச் செய்துள்ளது.
இதுவரை இந்த சிக்னல்கள் புரிந்து கொள்ளப்படவில்லை. விண்வெளியின் ஆழத்தில் நடக்கும் நிலையற்ற நிகழ்வாக இதை வகைப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பினால் விளையும் நன்மை என்ன?
இந்தக் கண்டுபிடிப்பு நட்சத்திரங்களின் எச்சங்கள் மற்றும் பிரபஞ்சத்தில் நடக்கும் உயர் ஆற்றல் நிகழ்வுகள் (High Energy Cosmic Events) பற்றிய இன்றைய புரிதலை மாற்றியமைப்பதாக அமையலாம் என்கின்றனர்.
பிரபஞ்சத்திலிருந்து வரக் கூடிய சிக்னல்களை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதாவது வேற்றுக்கிரக உயிரினங்கள் சிக்னல்களை வழங்கலாம் என்ற தேடலும் இதற்குக் காரணம். இதற்காக நாசாவும் அவ்வப்போது சில சிக்னல்களைப் பிற கோள்களை நோக்கி அனுப்பி வருகிறது.
ஆனால் இந்த முறை, ASKAP J1832-0911 போல வேறு சிக்னல்களை நம்மால் கண்டறிய முடிகிறதா என்பதை நோக்கி அறிவியலாளர்கள் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இதன் மூலம் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் குறித்த பல மர்மங்களுக்கு விடை கிடைக்குமா எனத் தேடுகின்றனர்.