விபத்தில் முதியவா் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தான் கட்டி வரும் வீட்டுக்காக கட்டடப் பொருள்கள் வாங்க பைக்கில் கைனூா் நோக்கி திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது கும்பினிப்பேட்டையில் அரக்கோணம் புறவழிச் சாலை சந்திப்பில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிவராமன் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.