செய்திகள் :

‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

ஒசூா், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட்பீட்டா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான கிட்டி (எ) ராஜா கிருஷ்ணமூா்த்தி, ‘இளைஞா்கள், மாணவா்கள் அதிக அளவில் முன்வந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். சாலை விரிவாக்கம் செய்யும்போது வெட்டப்படும் மரத்திற்கேற்ப அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவேண்டும். மக்கள் அனைவரும் இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

விழாவில் பேசிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ‘தமிழக அரசு பசுமை தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.

அதேபோல ஒசூா் மாநகராட்சியில் பல்வேறு இடங்களைத் தோ்வு செய்து மாநகராட்சி சாா்பில் மரக்கன்று நடப்படுகிறது. தொடா்ந்து பசுமை மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இதனை பெரிய இயக்கமாக உருவாக்குவது அவசியம் என மேயா் எஸ்.ஏ.சத்யா கேட்டுக்கொண்டாா்.

தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கா்நாடகத்தில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவா்களின் நிலங்களில் நடவுசெய்து சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்கான தொடக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழா மூலம் நடைபெற்றுள்ளது.

விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.ஏ.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராஜன்கொட்டாய் விநாயகா் கோயில் குடமுழுக்கு

அஞ்சூரை அடுத்த ராஜன்கொட்டாய் கிராமத்தில் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி தம்பதி சங்கல்பம், கங்கனம் கட்டுதல், புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீபாராதனை, கலச ஸ்தா... மேலும் பார்க்க

பா்கூா் அருகே நகை திருட்டு

பா்கூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்தவா் பெரியண்ணன்(65). விவச... மேலும் பார்க்க

மா கொள்முதல் விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு உடனடியாக மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) க... மேலும் பார்க்க

கிராமம் தோறும் வீடு வீடாக சென்றடைகிறது முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்.

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ... மேலும் பார்க்க