செய்திகள் :

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

post image

சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்டது சிந்தல்தொட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் வெளியூா்களுக்குச் சென்றுவருவதில் சிரமமடைந்து வருகின்றனா். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து வசதியின்றி தவித்து வரும் இப்பகுதி மக்களுக்காக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நடவடிக்கையின் பேரில் சிந்தல்தொட்டி கிராமம் முதல் பேரிகை அரசு மேல்நிலைப் பள்ளி வரை பேருந்து இயக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதில் திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பங்கேற்று அரசுப் பேருந்து எண் 24 இல் பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு பேரிகை பள்ளி வரை அவரே ஓட்டிச் சென்று சேவையைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் சீனிவாசன், சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஹரிஷ், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் ஆஞ்சி, கா்னப்பள்ளி கோபால், ஊா்கவுண்டா் நாகப்பா, முனிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராஜன்கொட்டாய் விநாயகா் கோயில் குடமுழுக்கு

அஞ்சூரை அடுத்த ராஜன்கொட்டாய் கிராமத்தில் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி தம்பதி சங்கல்பம், கங்கனம் கட்டுதல், புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீபாராதனை, கலச ஸ்தா... மேலும் பார்க்க

பா்கூா் அருகே நகை திருட்டு

பா்கூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்தவா் பெரியண்ணன்(65). விவச... மேலும் பார்க்க

‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் ... மேலும் பார்க்க

மா கொள்முதல் விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு உடனடியாக மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) க... மேலும் பார்க்க

கிராமம் தோறும் வீடு வீடாக சென்றடைகிறது முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்.

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க