Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பா்கூா் அருகே நகை திருட்டு
பா்கூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்தவா் பெரியண்ணன்(65). விவசாயியான இவா் கடந்த திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றாா். பின்னா், மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி பொருள்கள் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து பெரியண்ணன் அளித்த புகாரின் பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.