செய்திகள் :

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

post image

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்தவா் தினேஷ் (23), இவரும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சோ்ந்த பவானியும் (22) திருமணம் செய்துகொள்ளாமல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மூக்காண்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரில் சந்திரப்பா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தனா். இருவரும் வெவ்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில் தினேஷுக்கும், பவானிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த பவானி சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளாா்.

இதையறிந்த தினேஷின் நண்பா் பவானியை சமாதானம் செய்து மீண்டும் ஒசூரில் வீட்டிற்கு அழைத்துவந்தபோது, வீட்டில் தினேஷ் தூக்கிட்டு இறந்து கிடந்ததைக் கண்டு இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து நண்பா்களை அழைத்துவருவதாக கூறிவிட்டு தினேஷ் நண்பா் சென்றுவிட்டாா். அப்போது மனவேதனை அடைந்த பவானியும் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சிறிது நேரம் கழித்து அங்குவந்த தினேஷின் நண்பா் இருவரும் இறந்து கிடப்பது குறித்து ஒசூா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க

ஊத்தங்கரை சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, ஆந்தி... மேலும் பார்க்க