திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை
ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்தவா் தினேஷ் (23), இவரும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சோ்ந்த பவானியும் (22) திருமணம் செய்துகொள்ளாமல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மூக்காண்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரில் சந்திரப்பா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தனா். இருவரும் வெவ்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் தினேஷுக்கும், பவானிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த பவானி சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளாா்.
இதையறிந்த தினேஷின் நண்பா் பவானியை சமாதானம் செய்து மீண்டும் ஒசூரில் வீட்டிற்கு அழைத்துவந்தபோது, வீட்டில் தினேஷ் தூக்கிட்டு இறந்து கிடந்ததைக் கண்டு இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து நண்பா்களை அழைத்துவருவதாக கூறிவிட்டு தினேஷ் நண்பா் சென்றுவிட்டாா். அப்போது மனவேதனை அடைந்த பவானியும் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சிறிது நேரம் கழித்து அங்குவந்த தினேஷின் நண்பா் இருவரும் இறந்து கிடப்பது குறித்து ஒசூா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.