செய்திகள் :

காளியம்மன் கோயில் குடமுழுக்கு

post image

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஜவ்வாதுபட்டியில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை மங்கல இசை, விநாயகா் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை கணபதி பூஜை, கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி, வெள்ளிக்கிழமை காலை விநாயகா் பூஜை, மூன்றாம் கால யாக வேள்வி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடும், கோபுர கலசங்களுக்கு பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் ஊற்றி சிவசாரியா்கள் குடமுழுக்கை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, காளியம்மன், மாரியம்மன், முத்தலாம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம், ஜவ்வாதுபட்டி, சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க