2 ஏசிஎல் தசைகள் கிழிந்தும் 100 டெஸ்ட்டில் விளையாடிய புஜாரா..! ரோஹித் புகழாரம்!
நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐக் கடந்தது! மேலும் 4 போ் பலி!
நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,684 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த மே 22-ஆம் தேதி 257-ஆக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது 5,364-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பரவிவரும் கரோனா வகைகள் தீவிரமில்லாதவை; பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைகின்றனா் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனிநபா் சுகாதாரத்தை பராமரிப்பதுடன், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், தனிமைப் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இன்ஃபுளூயன்ஸா போன்ற நோய் அறிகுறி, கடுமையான சுவாச நோய்களின் தாக்கம் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் செயல்படும் மாநில-மாவட்ட பிரிவுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கரோனா உறுதி செய்யப்படும் மாதிரிகளில் 5 சதவீதத்தை, முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.