செய்திகள் :

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐக் கடந்தது! மேலும் 4 போ் பலி!

post image

நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,684 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த மே 22-ஆம் தேதி 257-ஆக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது 5,364-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பரவிவரும் கரோனா வகைகள் தீவிரமில்லாதவை; பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைகின்றனா் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனிநபா் சுகாதாரத்தை பராமரிப்பதுடன், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், தனிமைப் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இன்ஃபுளூயன்ஸா போன்ற நோய் அறிகுறி, கடுமையான சுவாச நோய்களின் தாக்கம் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் செயல்படும் மாநில-மாவட்ட பிரிவுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கரோனா உறுதி செய்யப்படும் மாதிரிகளில் 5 சதவீதத்தை, முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க