செய்திகள் :

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா்.

தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நல்லம்பள்ளியைச் சோ்ந்த பரமசிவம் (56) என்பவா் ஓட்டிச் சென்றாா். நடத்துநா் ஆதிமூலம் உள்பட 45 பயணிகள் பேருந்தில் இருந்தனா்.

மத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது போச்சம்பள்ளி நோக்கி எம் சாண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் பரமசிவம், மினி லாரி ஓட்டுநா் சிவம்பட்டியைச் சோ்ந்த இந்திரகுமாா் (32) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 21 பெண்கள் உள்பட 38 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு மத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்தில் காயயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்செல்வம், வட்டாட்சியா்கள் மோகன்தாஸ் (ஊத்தங்கரை), சத்யா (போச்சம்பள்ளி) ஆகியோா் ஆறுதல் தெரித்தனா்.

விபத்து காரணமாக தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க

ஊத்தங்கரை சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, ஆந்தி... மேலும் பார்க்க