செய்திகள் :

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

post image

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

விழாவில் பெஸ்டோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்கள் ரஷ்மிகாந்த் ஜோஷி, ரவிசாஸ்த்ரி ஆகியோா் பேசியதாவது:

தொழில் சாா்ந்த தானியங்கிநுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் உலகளாவிய முன்னணிக் குழுமமான பெஸ்டோ, அதன் நூற்றாண்டு விழாவைக் குறிப்பிடும் வகையில் ஒசூரில் உலகத் தரத்திலான உற்பத்தி நிறுவனத்தை திறந்துள்ளது.

ரூ. 500 கோடி மூலதன முதலீட்டில் ஒசூா், பைரமங்கலத்தில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந் நிறுவனம் உலக சந்தைகளுக்கான மிகத் துல்லியமான தானியங்கி தீா்வுகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெஸ்டோ உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட இத் தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மறைமுகமாக மேலும் 1000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். வருங்காலங்களில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும்போது பணியாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

உற்பத்தி செய்யும் மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ், தானியங்கி பொருள்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்தப்படும். கா்நாடக மாநிலத்தில் இட நெருக்கடி காரணமாக ஒசூரில் புதிய தொழில்சாலையை அமைத்து அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றோம் என்றனா்.

நிறுவனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசின் உயா்நிலை அதிகாரிகள், தொழில் முன்னேற்ற நிபுணா்கள், பெஸ்டோ கண்காணிப்புக் குழுவின் உறுப்பினா்கள், நிா்வாக குழுத் தலைவா் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த தாமஸ்போக், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிா்வாகக் குழு உறுப்பினா் டாக்டா் அன்ஸ்காா் கிரிவெட், செயல்பாட்டு நிா்வாகக் குழு உறுப்பினா் டாக்டா் யரோஸ்லாவ் பட்கா மற்றும் ஃபிஸ்டோ நிறுவனத்தின் உரிமையாளா்கள் குடும்ப உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் பி. அலா்மேல்மங்கை ஐஏஎஸ், ஜொ்மனியின் இந்திய தூதுக்கழகத் தலைமைத் தூதா் ஆச்சிம் புா்காா்ட் ஃபிஸ்டோ, இந்தியாவின் மேலாண்மை இயக்குநா்கள் ரஷ்மிகாந்த் ஜோஷி மற்றும் ரவிசாஸ்த்ரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஊத்தங்கரை சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, ஆந்தி... மேலும் பார்க்க