செய்திகள் :

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

post image

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகள், தொழில்துறை இடங்கள் மற்றும் சந்தைகளில் இருந்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: தீயணைப்புத் துறைக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 அவசர அழைப்புகள் வருகின்றன. இது அதிகரித்து வரும் வெப்பநிலை, அதிக சுமைகொண்ட மின்சுற்றுகள் மற்றும் ஏ.சி.கள், குளிரூட்டிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் ஏற்படுகிறது.

பெரும்பாலான அழைப்புகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் மற்றும் தொங்கும் மின்சார கம்பிகள் முக்கிய பிரச்னைகளாக உள்ள அடா்த்தியான மக்கள் தொகைகொண்ட குடியிருப்புப் பகுதிகள், தொழில்துறை இடங்கள் மற்றும் சந்தைகளில் இருந்து பதிவாகின்றன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெயா் வெளியிட விரும்பாத மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: இந்த நிகழ்வுகளில் பலவற்றில் வெப்ப வானிலை ஒரு வினையூக்கியாக செயல்படுகிறது. இதுபோன்ற வட, வெப்பமான சூழ்நிலைகளில் ஒரு சிறிய தீப்பொறிகூட ஒரு பெரும் தீயைத் தூண்டுவதற்கு போதுமானது.

குளிா்காலத்தில் எங்களுக்கு தினமும் சராசரியாக 50 முதல் 60 அழைப்புகள் வருகின்றன. ஆனால், கோடைக்காலத்தில் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100 முதல் 150 அழைப்புகள் வரை அதிகரிக்கும். கடந்த வாரம் தீயணைப்புத் துறைக்கு ஒரு நாளில் 170-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன என்றாா் அந்த அதிகாரி.

வியாழக்கிழமை தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவான ஐந்து தனித் தனி தீ விபத்துகளில் மூன்று வயது சிறுமி உள்பட குறைந்தது ஆறு போ் காயமடைந்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க