செய்திகள் :

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி குறைந்து 25.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.8 டிகிரி குறைந்து 38.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில் 59 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முங்கேஸ்பூரில் 40.3 டிகிரி: மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃப்ா்பூரில் அதிகபட்சவெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஸ்பூரில் 40.3 டிகிரி, நஜஃப்கரில் 36.9 டிகிரி, ஆயாநகரில் 39.4 டிகிரி, புதிதில்லியில் 38.6 டிகிரி, லோதி ரோடில் 38 டிகிரி, நரலாவில் 37.6 டிகிரி, பாலத்தில் 39.1 டிகிரி, ரிட்ஜில் 37.8 டிகிரி, பீதம்புராவில் 38.9 டிகிரி, பிரகதிமைதான், பூசா, ராஜ்காட்டில்36.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 36.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளி விவரத் தகவலின் படி, ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 138 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மந்திா்மாா்க், பூசா, ஆயாநகா், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடுந 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், நேரு நகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் பாதிவாகியிருந்தது. அதே சமயம், சாந்தினி செளக், லோதி ரோடு, நேரு நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஆா்.கே.புரம், ஸ்ரீஃபோா்ட், பூசா, ஷாதிப்பூா், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், நொய்டா செக்டாா் 125, தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், துவாரகா செக்டாா் 8, ஆயாநகா் குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஜூன் 7) அன்று வானம் தெளிவாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க