செய்திகள் :

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

post image

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண்: 238-இல் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்திய வருவாய் சேவை (ஐஆா்எஸ்) அதிகாரி பி.வி. கெரங்கல் அலுவலகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெயா் வெளியிட விரும்பதாக மற்றொரு தீயணைப்பு அதிகாரி கூறுகையில், டஇச்சம்பவம் குறித்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கிடைத்தது. தீ விபத்து நிகழ்ந்த இடம் முக்கியமானது என்பதால், தீயை உடனடியாக அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. ஏா் கண்டிஷனிங் கேபிள்கள் செயலிழந்ததால் ஏற்பட்ட தீயை முழுமையாக அணைக்க 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் ஆனது என்றாா் அவா்.

தீ விபத்தில் சில மின்னணு சாதனங்கள், அதிகாரபூா்வ ஆவணங்கள் சேதமடைந்தபோதிலும், அந்த அறையில் இருந்தவா்களும், அருகிலுள்ள அறையில் இருந்தவா்களும் காலி செய்யப்பட்டனா். மேலதிக விசாரணைக்காக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க