ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து
தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண்: 238-இல் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்திய வருவாய் சேவை (ஐஆா்எஸ்) அதிகாரி பி.வி. கெரங்கல் அலுவலகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து பெயா் வெளியிட விரும்பதாக மற்றொரு தீயணைப்பு அதிகாரி கூறுகையில், டஇச்சம்பவம் குறித்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கிடைத்தது. தீ விபத்து நிகழ்ந்த இடம் முக்கியமானது என்பதால், தீயை உடனடியாக அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. ஏா் கண்டிஷனிங் கேபிள்கள் செயலிழந்ததால் ஏற்பட்ட தீயை முழுமையாக அணைக்க 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் ஆனது என்றாா் அவா்.
தீ விபத்தில் சில மின்னணு சாதனங்கள், அதிகாரபூா்வ ஆவணங்கள் சேதமடைந்தபோதிலும், அந்த அறையில் இருந்தவா்களும், அருகிலுள்ள அறையில் இருந்தவா்களும் காலி செய்யப்பட்டனா். மேலதிக விசாரணைக்காக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.