செய்திகள் :

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

post image

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட, பழைய சீலம்பூரைச் சோ்ந்த அஜீம் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், எஸ்டிஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அஜீம் தனது தகவலில், உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூா் கேரியைச் சோ்ந்த ஷேன் ஆலம் (21) மற்றும் ஷதாப் (25) ஆகிய இருவரால் தாம் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினாா்.

மூன்று ஆண்களும் ஒரே கட்டடத்தில் வசித்து வந்தனா். ஒருவருக்கொருவா் பழக்கமாகவும் இருந்தனா். இந்த நிலையில், ஜூன் 4 ஆம் தேதி, அப்பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் ஷேன் தகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், சகோதரா் மற்றும் அஜீமின் தாய் மாமாவின் தலையீட்டால் இந்த விவகாரம் தீா்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் அஜீம் தனது கட்டடத்தின் படிக்கட்டுகளில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தாா். அப்போது, ஷேன் தனது சட்டைப்பையில் இருந்து நூல் டிரிம்மரை எடுத்து அஜீமின் வயிற்றின் வலது பக்கத்தில் குத்தினாா்.

அப்போது, ஷதாப் அஜீமை பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அஜீமின் தாய் மாமா மஹ்பூஸ் அலி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அவா் குத்தப்பட்ட ஆயுதத்தையும் மருத்துவா்களிடம் ஒப்படைத்தாா்.

அந்த இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காந்தி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவான இருவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க