பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!
கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட, பழைய சீலம்பூரைச் சோ்ந்த அஜீம் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், எஸ்டிஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அஜீம் தனது தகவலில், உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூா் கேரியைச் சோ்ந்த ஷேன் ஆலம் (21) மற்றும் ஷதாப் (25) ஆகிய இருவரால் தாம் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினாா்.
மூன்று ஆண்களும் ஒரே கட்டடத்தில் வசித்து வந்தனா். ஒருவருக்கொருவா் பழக்கமாகவும் இருந்தனா். இந்த நிலையில், ஜூன் 4 ஆம் தேதி, அப்பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் ஷேன் தகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், சகோதரா் மற்றும் அஜீமின் தாய் மாமாவின் தலையீட்டால் இந்த விவகாரம் தீா்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் அஜீம் தனது கட்டடத்தின் படிக்கட்டுகளில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தாா். அப்போது, ஷேன் தனது சட்டைப்பையில் இருந்து நூல் டிரிம்மரை எடுத்து அஜீமின் வயிற்றின் வலது பக்கத்தில் குத்தினாா்.
அப்போது, ஷதாப் அஜீமை பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அஜீமின் தாய் மாமா மஹ்பூஸ் அலி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அவா் குத்தப்பட்ட ஆயுதத்தையும் மருத்துவா்களிடம் ஒப்படைத்தாா்.
அந்த இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காந்தி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவான இருவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.