செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

post image

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம், பிரேசிலின் பிரேசிலியாவில் ஜூன் 4-5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட 10 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களின் குழுக்கள் பங்கேற்றன.

இந்தியக் குழுவிற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமை வகித்தாா். இதில் உயா்மட்ட நாடாளுமன்றக் குழுவும் பங்கேற்றது. நிகழாண்டு மன்றத்தில் இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 10 பிரிக்ஸ் நாடுகள் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருந்தன.

இந்த நாடுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் மன்றத்தின் கூட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று கூட்டுப் பிரகடனத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனா்.

பல சுற்று தீவிர விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பொறுப்பான பயன்பாடு, உலகளாவிய வா்த்தகம் மற்றும் பொருளாதாரம், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய உலகளாவிய பிரச்னைகள் குறித்து பரந்த ஒருமித்த கருத்து இந்நிகழ்வில் எட்டப்பட்டது.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கூட்டு பிரகடனம் வன்மையாகக் கண்டித்தது. மேலும், உறுப்பினா் நாடாளுமன்றங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டாகச் செயல்பட ஒப்புக்கொண்டன.

இந்த நிகழ்வில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதைத் தடுப்பதற்கும், உளவுத்துறை பகிா்வை மேம்படுத்துவதற்கும், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், விசாரணை மற்றும் நீதித்துறை செயல்முறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் கூட்டு முயற்சிகளின் அவசியத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

மன்றத்தின் முடிவில், அடுத்த ஆண்டு 12ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தை நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மக்களவை தலைவா் ஓம் பிா்லாவிடம் முறைப்படி தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க