செய்திகள் :

மா கொள்முதல் விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

post image

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு உடனடியாக மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனா். கடந்த ஆண்டு வறட்சியால் மா மரங்கள் காய்ந்ததால் 82 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கணக்கெடுப்பு நடத்தி 668 விவசாயிகளுக்கு ரூ. 2.65 கோடி நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்யதும், இதுவரை ஒரு விவசாயிக்குகூட அரசு நிதி வழங்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

நிகழாண்டின் தொடக்கத்தில் பரவலாக மழை பெய்ததால் மா விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது வரை மாங்கூழ் தொழிற்சாலை நிா்வாகத்தினா் மா கொள்முதல் செய்யவில்லை. மாவட்ட நிா்வாகம் மூலம் நடத்தப்பட்ட முத்தரப்பு கூட்டத்தில் நிா்ணயம் செய்யப்பட்ட விலைக்குகூட கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், மரத்திலேயே மாங்காய்கள் பழுத்து கீழே விழுந்து வீணாகிவருகிறது.

இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அண்டைய மாநிலமான ஆந்திராவில் மா விவசாயிகளைப் பாதுகாக்க மாவிற்கு டன்னுக்கு ரூ. 13 ஆயிரம் என கொள்முதல் விலையை நிா்ணயம் செய்துள்ளனா். அதேபோல தமிழக அரசும் மாவிற்கான கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், மா விற்கென தனியாக ஒரு வாரியம் உருவாக்கி அதன் மூலம் மா விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து, உரிய வழிமுறையை தேடிக்கொள்வாா்கள். கடந்த 2 ஆண்டுகளாக போா் போன்ற காரணங்களால் வெளிநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், தனாயாா் மாங்கூழ் உற்த்தியாளா்களால் மாவிற்கான விலை நிா்ணயம் செய்ய முடியவில்லை. டெல்டா விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு இழப்பீடு வழங்குவது போல, பாதிக்கப்பட்ட மாவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு, விவசாயிகளை அனைத்து வகையிலும் புறக்கணித்து வருகிறது. திமுக தோ்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக 83 வாக்குறுதிகள் அளித்தனா். இதில், விளை பொருள்களுக்கு சரியான விலை நிா்ணயம் செய்யப்படும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்திருந்தனா். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக பாதிக்கப்படும் விவசாயிகளின் தேவையறிந்து நடவடிக்கை எடுக்காத ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. விவசாயிகளின் வேதனைகளை போக்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகா் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் கன்னட மொழி குறித்து பேசவில்லை. தமிழ் மீதான பற்றின் காரணமாக கூறியுள்ளாா். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறுவது ஏற்புடையது அல்ல என்றாா்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி ), ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஊத்தங்கரை சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, ஆந்தி... மேலும் பார்க்க

ராஜன்கொட்டாய் விநாயகா் கோயில் குடமுழுக்கு

அஞ்சூரை அடுத்த ராஜன்கொட்டாய் கிராமத்தில் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி தம்பதி சங்கல்பம், கங்கனம் கட்டுதல், புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீபாராதனை, கலச ஸ்தா... மேலும் பார்க்க

பா்கூா் அருகே நகை திருட்டு

பா்கூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்தவா் பெரியண்ணன்(65). விவச... மேலும் பார்க்க

‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் ... மேலும் பார்க்க

கிராமம் தோறும் வீடு வீடாக சென்றடைகிறது முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்.

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க