மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர முகாம் மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட அரசு எலும்பு முறிவுத் துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, 177 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, 87 பேருக்கு அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனா். இதையடுத்து, முகாமிலேயே பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, 87 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் வழங்கினாா்.
மேலும், இந்த முகாமில் சக்கர நாற்காலி கோரி விண்ணப்பித்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
முகாமில், மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.