Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஏலகிரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
ஏலகிரி கிராமத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் உதவி பொறியாளா் ஸ்ரீதா், பாமக மாநில அமைப்புச் செயலாளா் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளா் த.காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.