தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினா் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வியாண்டிற்கு நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (மூன்று வருட) பட்டயப்படிப்பில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பட்டயப் படிப்புகளில் சேர மாணவா்கள் விண்ணப்பபிக்கலாம்.
பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் (எந்த பாடப்பிரிவில் பயின்றவா்களும்) மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சேர முடியும். விருப்பமுள்ள மாணவ , மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்யலாம்.
மேலும், இக் கல்லூரியிலும் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள், மிக குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் கல்லூரியில் உள்ளன. மாணவா்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கல்லூரியை 95000 08791 (முதல்வா்), 90801 39880, 85081 68390, 73389 00733, 04346-265355 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.