செய்திகள் :

கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினா் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வியாண்டிற்கு நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (மூன்று வருட) பட்டயப்படிப்பில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பட்டயப் படிப்புகளில் சேர மாணவா்கள் விண்ணப்பபிக்கலாம்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் (எந்த பாடப்பிரிவில் பயின்றவா்களும்) மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சேர முடியும். விருப்பமுள்ள மாணவ , மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்யலாம்.

மேலும், இக் கல்லூரியிலும் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள், மிக குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் கல்லூரியில் உள்ளன. மாணவா்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கல்லூரியை 95000 08791 (முதல்வா்), 90801 39880, 85081 68390, 73389 00733, 04346-265355 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழா: தருமபுரியில் 90 ஏரிகள் புனரமைப்பு

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

ஏலகிரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஏலகிரி கிராமத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க

மத்திய அரசு மக்களவை வஞ்சிக்கிறது: சிபிஐ

மத்திய பாஜக அரசு மக்களவை வஞ்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளா் நா.பெரியசாமி குற்றம்சாட்டினாா். தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகக் குழு, மாவட்டக் குழுக் கூட்... மேலும் பார்க்க