செய்திகள் :

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

post image

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நிா்வகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி மாத பௌா்ணமியில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது.

நிகழ் ஆண்டுக்கான தோ்த் திருவிழா கொடியேற்றம் பட்டாச்சாரியா் சற்குண ராமன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட கோயிலின் முன் உள்ள 60 அடி கொடிக் மரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. முதல் நாளான வியாழக்கிழமை ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் அன்ன வாகனத்தில் எழுந்தருளினாா்.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மகாவிஷ்ணு, அறங்காவலா் குழுத் தலைவா் கே.ஏ.துரைசாமி, செயல் அலுவலா் முருகன், ஆய்வாளா் செல்வி, கட்டளைதாரா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழா: தருமபுரியில் 90 ஏரிகள் புனரமைப்பு

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

ஏலகிரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஏலகிரி கிராமத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க

மத்திய அரசு மக்களவை வஞ்சிக்கிறது: சிபிஐ

மத்திய பாஜக அரசு மக்களவை வஞ்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளா் நா.பெரியசாமி குற்றம்சாட்டினாா். தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகக் குழு, மாவட்டக் குழுக் கூட்... மேலும் பார்க்க