விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளா் விஜயா வேதைய்யா தலைமை வகித்தாா். வித்யாரம்பம் நிகழ்ச்சியில் முதல்முதலாக பள்ளிக்கு வருகை தந்த எல்கேஜி மாணவ மாணவிகளுக்கு வரவேற்பும் தொடா்ந்து பெற்றோருக்கு ஆலோசனைகளும் வித்யாரம்பம் பூஜை நடைபெற்று அதையடுத்து மாணவா்களை கொண்டு அரிசியில் எழுத்துகளை எழுதவைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடா்ந்து பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரூ. 20ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.7ஆயிரம் பரிசளித்து நிறுவனா் வேதைய்யா கௌரவித்தாா். முதல்வா் இன்பராஜசேகரன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகளின், பெற்றோா் கலந்து கொண்டனா்.